செய்திகள்
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
திருமருகல் அருகே மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்ட முத்துகுமாரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமருகல்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆதினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் முத்துகுமாரன் (வயது35). இவர் திருமருகல் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிடாமங்கலம் உள்ள உயர் மின் அழுத்த பாதையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துகுமாரனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட முத்துகுமாரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகுமாரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே ஆதினக்குடி கிராமத்தை சேர்ந்தவர் தனபாலன். இவருடைய மகன் முத்துகுமாரன் (வயது35). இவர் திருமருகல் துணை மின் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிடாமங்கலம் உள்ள உயர் மின் அழுத்த பாதையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துகுமாரனை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கிவீசப்பட்ட முத்துகுமாரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துகுமாரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.