செய்திகள்
வழிப்பறி வழக்கில் சேலம் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை
பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்த வழக்கில் சேலம் வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
சேலம்:
சேலம் குகை பஞ்சதாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் ராஜா என்ற ராஜ்குமார் (வயது 23). இவர் கடந்த 2013-ம் ஆண்டு கிச்சிப்பாளையம் நீலாம்பாள் தோட்டம் பகுதியில் நடந்து சென்ற பிரேமகுமாரி என்ற பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்தார்.
இது தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சி.ஜே.எம். கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் இன்று ராஜா என்ற ராஜ்குமாருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.