செய்திகள்

வானூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலி

Published On 2018-05-22 15:50 GMT   |   Update On 2018-05-22 15:50 GMT
வானூர் அருகே குட்டையில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:

வானூர் தாலுகா சேமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை மகன் ராஜேஷ் (வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் அதே கிராமத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றார். அங்குள்ள குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் ராஜேஷ் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத ராஜேஷ், ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், ராஜேசை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ராஜேஷ், நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News