செய்திகள்
சிவகங்கை அருகே மணல் கடத்திய 9 பேர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் எந்த பலனும் இல்லை.
சிவகங்கை:
சிவகங்கை அருகே உள்ள கோவானூர் பகுதியில் உள்ள உப்பூர் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக கிராம நிர்வாக அதிகாரி புகழேந்திக்கு தகவல் கிடைத்தது.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஆற்றில் மணல் கடத்திக் கொண்டிருந்த ரமேஷ் (வயது 38), கூத்தாண்டன் (34), பாலா (22), ரமேஷ் கண்ணா (39), நாகராஜ் (32) உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 டிப்பர் லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன.