செய்திகள்

நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க மெரினா, சேப்பாக்கத்தில் போலீசார் குவிப்பு

Published On 2018-05-20 15:33 IST   |   Update On 2018-05-20 15:33:00 IST
இலங்கையில் இறுதிப்போரின் போது உயிரிழந்த தமிழர்களை நினைவு கூரும் வகையில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்கும் வகையில் மெரினா, சேப்பாக்கத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். #Marina #Police
சென்னை:

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது.

இதற்கிடையே, மெரினா கடற்கரையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போராட்டம் எனும் பெயரில் மெரினாவில் தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்யவேண்டாம். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், சென்னை மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. நீதிமன்ற தடையை மீறி மெரினாவில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். #Marina #Police
Tags:    

Similar News