செய்திகள்

வேளச்சேரியில் அ.தி.மு.க. பிரமுகரின் தாயை தாக்கி நகை கொள்ளை

Published On 2018-05-18 07:36 GMT   |   Update On 2018-05-18 07:36 GMT
வேளச்சேரியில் பட்டபகலில் அதிமுக பிரமுகரின் தாயாரை 3 பேர் கும்பல் தாக்கி நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:

வேளச்சேரி நேரு நகரை சேர்ந்தவர் முல்லை செல்வம். அ.தி.மு.க. வட்ட செயலாளராக உள்ளார். இவரது தாய் பூமயில் (வயது 64).

இன்று காலை பூமயில் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்காக அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு நடந்து சென்றார்.

காமராஜபுரம், குமரன் தெருவில் வந்த போது அவரை ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் வழிமறித்தனர். திடீரென அவர்கள் பூமயில் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பூமயில் கொள்ளையர்கள் பிடியில் இருந்து நகையை பாதுகாக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் பூமயிலை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவர் அணிந்திருந்த நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த பூமயிலுக்கு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
Tags:    

Similar News