செய்திகள்
பயணியிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்கள் கைது
விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியில் பஸ் பயணியிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.
இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.
இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.