செய்திகள்

விபசார புரோக்கரிடம் லஞ்சம் - 2 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

Published On 2018-05-16 06:39 GMT   |   Update On 2018-05-16 06:39 GMT
சென்னையில், விபச்சார புரோக்கர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிக் கொண்டு விபச்சாரத்துக்கு அனுமதியளித்த 2 இன்ஸ்பெக்டர்ள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை:

சென்னை போலீசில் மத்திய குற்றப்பிரிவின் கீழ் விபசார தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது லஞ்ச புகார் எழுந்தது.

விபசார புரோக்கர்களிடம் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்கிக்கொண்டு விபசாரத்துக்கு அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு அறிக்கை அளித்தனர். இதன்படி 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பதில் கோட்டடூர்புரத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் விபசார தடுப்பு பிரிவுக்கு புதிய இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்ட 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் வேறு காவல் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News