செய்திகள்

காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது- வைகோ

Published On 2018-05-11 16:58 IST   |   Update On 2018-05-11 16:58:00 IST
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தில் நீதி கிடைக்காது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கீழ்வேளூர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நாகை பஸ் நிலையத்தில் வந்த வைகோ அங்கு பேசியதாவது:-

தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுத செய்த அநீதி இதுவரை எந்த காலத்திலும் நடைபெற்றது இல்லை.

உச்சநீதிமன்றத்தில் வருகிற 14-ந்தேதி காவிரி பிரச்சனை தொடர்பான வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது.

காவிரி நீர் மறுக்கப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகம் கிளர்ச்சி களமாக மாறாத வரை காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு நீதி கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News