செய்திகள்

லஞ்சம் வாங்கிய வழக்கில் திருவாரூர் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. சஸ்பெண்டு

Published On 2018-05-04 05:19 GMT   |   Update On 2018-05-04 05:19 GMT
மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.69 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பலூலுல்லா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார்.

அப்போது சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீட்டு தொகை வசூலித்ததாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ரூ.68 லட்சத்து 91 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து லஞ்ச ஓழிப்பு போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லா மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

இதனையடுத்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் பணி ஒய்வு பெற இருந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லா சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



திருவாரூர், மே.4-

திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பலூலுல்லா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார்.

அப்போது சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீட்டு தொகை வசூலித்ததாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ரூ.68 லட்சத்து 91 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து லஞ்ச ஓழிப்பு போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லா மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

இதனையடுத்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் பணி ஒய்வு பெற இருந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லா சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தவர் பலூலுல்லா. இவர் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார்.

அப்போது சென்னையில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீட்டு தொகை வசூலித்ததாகவும், இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ரூ.68 லட்சத்து 91 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து லஞ்ச ஓழிப்பு போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லா மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

இதனையடுத்து அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாத இறுதியில் பணி ஓய்வு பெற இருந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு பலூலுல்லா சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News