செய்திகள்

வளசரவாக்கம் அருகே பூட்டிய வீட்டில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் மர்ம மரணம்

Published On 2018-03-06 13:49 IST   |   Update On 2018-03-06 13:49:00 IST
வளசரவாக்கம் அருகே பூட்டிய வீட்டில் ஓய்வு பெற்ற மின் ஊழியர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வளசரவாக்கம், சவுத்ரி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் அமெரிக்காவில் உள்ளார். மகள் திருமணமாகி கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் வனிதா பெங்களூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.

நேற்று மாலை துரை ராஜன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வளசரவாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் முத்து ராஜா மற்றும் போலீசார் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கையறையில் அழுகிய நிலையில் துரை ராஜ் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

துரைராஜ் எப்படி? இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News