செய்திகள்
மாடு மீது மோதிய கார் தீ பிடித்தது தந்தை-மகன் உயிர் தப்பினர்
மாமல்லபுரம் அருகே மாடு மீது கார் மோதிய விபத்தில் கார் தீ பிடித்து எரிந்தது. இதில் அதிஷ்டவசமாக காருக்குள் இருந்த தந்தை, மகன் உயிர் தப்பினர்.
மாமல்லபுரம்:
பாடியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் பிரதீஷ் (வயது 6). இருவரும் காரில் கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலை ஆலமரம் பஸ் ஸ்டாப் எதிரே வந்த போது சாலையின் குறுக்கே மாடு பாய்ந்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடு மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த சதீஷ், மகன் பிரதீசுடன் அலறியடித்து கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றியது.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து மீட்பு பணியில் இடுபட்டனர். இதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் மோதியதில் காயம் அடைந்த மாடு பலியானது.
காரில் தீப்பிடித்தவுடன் சதீஷ், மகனுடன் கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பாடியை சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் பிரதீஷ் (வயது 6). இருவரும் காரில் கல்பாக்கத்தை அடுத்த விட்டிலாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலை ஆலமரம் பஸ் ஸ்டாப் எதிரே வந்த போது சாலையின் குறுக்கே மாடு பாய்ந்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார், மாடு மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.
அதிர்ச்சி அடைந்த சதீஷ், மகன் பிரதீசுடன் அலறியடித்து கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றியது.
தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து மீட்பு பணியில் இடுபட்டனர். இதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் மோதியதில் காயம் அடைந்த மாடு பலியானது.
காரில் தீப்பிடித்தவுடன் சதீஷ், மகனுடன் கீழே இறங்கியதால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews