செய்திகள்

நாகை அருகே தம்பி மனைவியை எரித்து கொன்ற அண்ணன் கைது

Published On 2018-02-03 15:41 IST   |   Update On 2018-02-03 15:41:00 IST
நாகை அருகே தம்பி மனைவியை எரித்து கொன்ற அண்ணணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்வேளூர்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த அகரகொந்தகை வடக்கு செட்டி தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). இவரது மனைவி அமுதா (30). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் செந்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் குழந்தைகளுடன் அமுதா தனியாக வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த அமுதாவிடம், செந்திலின் அண்ணன் குமார் (54) உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். இதற்கு அமுதா மறுப்பு தெரிவித்து சத்தம் போட்டுள்ளார்.

இந்த வி‌ஷயம் வெளியே சொன்னால் பிரச்சினை வரும் என்று குமார் கருதினார். இதனால் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த மண்ணெணையை எடுத்து அமுதா உடல் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீ மளமள என்று பரவியதில் அமுதா படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அமுதா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நாகை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News