செய்திகள்
எச்.ராஜா வாயை அடக்கி பேச வேண்டும்: இளங்கோவன்
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். அவர் வாயை அடக்கி பேச வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை சந்திப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பஸ்கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அரசு கண் துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளன. இது போதாது. முழுமையாக குறைக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அடித்து இருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காவிரி பிரச்சினை பற்றி பேச செல்லவில்லை. சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கூடுதல் சலுகைகள் பெறவே செல்கிறார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். இவர் வாயை அடக்கி பேச வேண்டும். இல்லை என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.
மத்திய பட்ஜெட் என்பது கண்துடைப்புதான். ஜி.எஸ்.டி.யால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யில் பெரிய மாற்றம் வரும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அது கண்துடைப்பு வேலையாகதான் இருக்கும் என கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், ஆலந்தூர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews
கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை சந்திப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பஸ்கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் அரசு கண் துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளன. இது போதாது. முழுமையாக குறைக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அடித்து இருக்கிறார்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்- மந்திரி சித்தராமையாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காவிரி பிரச்சினை பற்றி பேச செல்லவில்லை. சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு கூடுதல் சலுகைகள் பெறவே செல்கிறார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைவர்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார். இவர் வாயை அடக்கி பேச வேண்டும். இல்லை என்றால் அவர் தமிழகத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.
மத்திய பட்ஜெட் என்பது கண்துடைப்புதான். ஜி.எஸ்.டி.யால் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி.எஸ்.டி.யில் பெரிய மாற்றம் வரும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். அது கண்துடைப்பு வேலையாகதான் இருக்கும் என கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவராமன், ஆலந்தூர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews