செய்திகள்
பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி வேதாரண்யம் விவசாயிகள் தட்டு ஏந்தி போராட்டம்
பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தட்டு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கத்தரிபுலம், மருதூர், ஆயக்காரன்புலம், தகட்டூர், பஞ்சநதிகுளம் ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 2016-17க்கான பயிர் காப்பீட்டுத் தொகை 100 சதவீதம் கேட்டு விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டம் கத்தரிப்புலத்தில் 21-வது நாளாகவும், தகட்டூரில் 13-வது நாளாகவும் ஆயக்காரன்புலத்தில் 12-வது நாளாகவும் மருதூர் தெற்கில் 10-வது நாளாகவும் மருதூர் வடக்கில் 6-வது நாளாகவும் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
மருதூரில் தட்டு எந்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் விவசாயிகள் பொங்கலுக்குள் பயிர் காப்பீடு வழங்காவிட்டால் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
வேதாரண்யம் தாலுகா கத்தரிபுலம், மருதூர், ஆயக்காரன்புலம், தகட்டூர், பஞ்சநதிகுளம் ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 2016-17க்கான பயிர் காப்பீட்டுத் தொகை 100 சதவீதம் கேட்டு விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டம் கத்தரிப்புலத்தில் 21-வது நாளாகவும், தகட்டூரில் 13-வது நாளாகவும் ஆயக்காரன்புலத்தில் 12-வது நாளாகவும் மருதூர் தெற்கில் 10-வது நாளாகவும் மருதூர் வடக்கில் 6-வது நாளாகவும் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
மருதூரில் தட்டு எந்தியும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் விவசாயிகள் பொங்கலுக்குள் பயிர் காப்பீடு வழங்காவிட்டால் பொங்கல் பண்டிகையை கருப்பு தினமாக அறிவித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.