செய்திகள்
படிப்பு சரிவர வராததால் பெற்றோர் கண்டித்ததில் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற சிறுவன் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார்.
மானாமதுரை:
மானாமதுரை கண்ணார்தெருவை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மகன் சந்தோஷ். இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பு சரிவர வராததால் சந்தோஷ் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தான்.
இதனை அவனது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோபித்துக்கொண்டு சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சந்தோஷ், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தாயார் பாண்டியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், மானாமதுரை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். #tamilnews