செய்திகள்

திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் பாலிடெக்னிக் மாணவி தற்கொலை

Published On 2018-01-04 17:45 IST   |   Update On 2018-01-04 17:45:00 IST
திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்:

செங்கத்தை சேர்ந்த அயோத்தி என்பவரது மகள் நிஷாந்தி (வயது 19). திருப்பத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

இதே கல்லூரியில் படிக்கும் திருப்பத்தூர் சதாசிவம் படையாச்சி தெருவை சேர்ந்த சின்னதம்பி மகன் பிரசாந்த் (20). என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து நிஷாந்தி அவரது கணவர் வீட்டில் தங்கினார். தம்பதி இருவரும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தனர்.

நேற்று இரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிஷாந்தி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலை அவர் பிணமாக தொங்கியதை கண்ட குடும்பத்தினர் திடுக்கிட்டனர். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமணமாகி 5 மாதங்களில் தற்கொலை செய்து கொண்டதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருப்பத்தூர் சப்-கலெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Similar News