செய்திகள்
திருப்புவனம் அருகே 10-ம் வகுப்பு மாணவர் மாயம்
பள்ளிக்கூடம் சென்ற 10-ம் வகுப்பு மாணவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் அருகே உள்ள டி.அதிகரை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் பிரவீன்குமார்(வயது 16). இவர் மணலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று பள்ளிக்கூடம் சென்று வருவதாக கூறிச் சென்ற பிரவீன்குமார், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின்பேரில் பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews