செய்திகள்

மயிலாடுதுறையில் பஸ் மோதி வியாபாரி பலி

Published On 2017-12-29 15:34 IST   |   Update On 2017-12-29 15:34:00 IST
மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பகுதியில் வள்ளலகரம் லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுப்புராயன் (வயது 46). இவர் கச்சேரி சாலையில் ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இரவு வழக்கம்போல் கடை விற்பனை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகக்குடி என்ற பகுதியில் வந்தபோது சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த தனியார் பஸ் அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த சுப்புராயன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

இறந்த சுப்புராயனுக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Similar News