செய்திகள்

கூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2017-12-22 12:54 IST   |   Update On 2017-12-22 12:54:00 IST
கூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

கூவத்தூர் பழைய காலனி பகுதியில் பாண்டிச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று முத்து லட்சுமி என்பவர் வீட்டில் சோதனையிட்ட போது அங்கு சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

போலீசார் அனைவரையும் அவருக்கு உதவியாக இருந்த குமாரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.

Similar News