செய்திகள்

தேவகோட்டையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2017-09-24 12:41 GMT   |   Update On 2017-09-24 12:41 GMT
மூதாட்டியிடம் 3 பவுன் நகை பறித்ததாக 2 பேர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை:

தேவகோட்டை நகர் ஆலம்பட்டர் தெருவைச் சேர்ந்தவர் மீனாட்சி (வயது 66). இவர், அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மீனாட்சியிடம், பேப்பரை காட்டி அதில் உள்ள முகவரியை கேட்டனர்.

அதனை வாங்கி மீனாட்சி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு 2 வாலிபர்களும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

அதிர்ச்சிய டைந்த மீனாட்சி, தேவகோட்டை நகர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்துச் சென்ற 2 பேரை தேடி வருகிறார்.

Tags:    

Similar News