செய்திகள்

மாமல்லபுரம் கடலில் மூழ்கி 2 வாலிபர்கள் பலி

Published On 2017-08-15 10:31 GMT   |   Update On 2017-08-15 10:31 GMT
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்தவர் உள்பட இரண்டு வாலிபர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மாமல்லபுரம்:

சேலத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 17). ஸ்டவ் பழுது பார்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் குடும்பத்துடன் மாம்மல்லபுரத்துக்கு சுற்றுலா வந்திருந்தார்.

அனைவரும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராட்சத அலை கார்த்திக்கை கடலுக்குள் இழுத்து சென்றது. உறவினர்களால் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இந்த நிலையில் பட்டிப்புலம் அருகே கார்த்திக் பிணமாக கரை ஒதுங்கினார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்தவர் முகமது சலீம் (34). இவர் நண்பர்களுடன் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்தார். பின்னர் கடலில் குளித்தார். ராட்சத அலையில் சிக்கிய முகமது சலீம் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் கடற்கரை கோவில் அருகே கரை ஒதுங்கியது.

தொடர் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடலில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்குவதை தடுக்க கடலோர பாதுகாப்பு படை நீச்சல் வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News