செய்திகள்

காஞ்சீபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயம்

Published On 2017-08-14 14:37 IST   |   Update On 2017-08-14 14:37:00 IST
காஞ்சீபுரம் அருகே டிராக்டர் கவிழ்ந்து 20 பெண்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிச்சத்திரம் அருகே உள்ள பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 20 பெண்கள் இன்று காலை விவசாய பணிக்கு டிராக்டரில் சென்றனர்.

அப்போது சாலையோர பள்ளத்தில் சிக்கி டிராக்டர் கவிழ்ந்தது. இதில் 20 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News