செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: செய்யூரில் 21.5 மி.மீட்டர் பதிவானது

Published On 2017-08-13 17:57 IST   |   Update On 2017-08-13 17:57:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் நகரில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கனமழை பெய்தது. காந்திரோடு, காமராஜர் சாலை, பஸ்நிலையம், இரட்டை மண்டபம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.

தொடர் மழையின் காரணமாக காஞ்சீபுரம் ராஜாஜி மார்கெட்டில் மழைநீர் தேங்கியது. இதனால் வியாபாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டது.

சாலை ஓர வியாபாரமும் முற்றிலும் முடங்கியது. விடுமுறை நாளான இன்று நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருக்கும் நிலையில் தொடர் மழையின் காரணமாக இன்று இரு சக்கர வாகனப் போக்குவரத்தும் பெருமளவு இல்லை. இன்று காலை பலத்த மழை கொட்டியது.

இதேபோல் மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழையின் அளவு

(மில்லி மீட்டரில்) வருமாறு:-

காஞ்சீபுரம் - 5.2

செங்கல்பட்டு - 1.4

தாம்பரம் - 7.4

கேளம்பாக்கம் - 7.8

செய்யூர் - 21.5

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒட்டு மொத்த மழை அளவாக 93.3 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

திருவள்ளூரில் இன்று காலை மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

Similar News