செய்திகள்

சிவகங்கை-மதுரை மாவட்டங்களில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்த மழை - இடிதாக்கி தொழிலாளி பலி

Published On 2017-08-01 15:28 IST   |   Update On 2017-08-01 15:28:00 IST
சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. மழையின் போது இடிமின்னல் தொழிலாளி பலியானார்.
சிவகங்கை:

சிவகங்கை நகர், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

காலையில் வெயிலின் அளவு அதிகம் இருந்த நிலையில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

சிவகங்கை தாலுகா இடையமேலூர் பகுதியைச் சேர்ந்த சலூன் கடை நடத்தி வரும் ஆனந்தன் என்பவர் நேற்று பெய்த மழையின் போது இடிமின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி சாவித்ரி தாலுகா போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு இதமான காற்று வீசியது. திருமங்கலம், மேலூர், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நகர் பகுதியில் லேசான தூரல் மழை பெய்தது.

Similar News