இளையான்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
சிவகங்கை:
இளையான்குடி தாலுகா பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது32). இவர் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
சம்பவத்தன்று இவரது தாயார் ராக்கு (55) புதிய வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் நைசாக ராக்கு கழுத்தில் கிடந்த 3¼ பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையை சேர்ந்தவர் அடைகாப்பான் (80). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். இதை பயன் படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் பின்புறம் வழியாக வீட்டுக்குள் புகுந்தனர்.
ஆனால் அங்கு நகை- பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் நெற் குப்பை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ சேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.