செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து கடத்தப்பட்ட 4 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

Published On 2017-07-29 13:26 IST   |   Update On 2017-07-29 13:26:00 IST
சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 4 கிலோ தங்க கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காரைக்காலை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 10.30 மணிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது காரைக்காலை சேர்ந்த ஹஜா இப்ராகிம் (40) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது கைப்பையில் 20 தங்க கட்டிகள் மறைத்து வைத் திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை தனி அறையில் வைத்து சோதனை செய்த னர். அவரது உடலில் மேலும் 20 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொத்தம் 4 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் விசாரித்த போது அவற்றை சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Similar News