செய்திகள்

தேவகோட்டை அருகே மதுக்கடை திறப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

Published On 2017-07-22 20:30 IST   |   Update On 2017-07-22 20:30:00 IST
தேவகோட்டை அருகே காடத்தி கிராமத்தில் அரசு மதுபானக்கடை திறப்பதை எதிர்த்து மகளிர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தேவகோட்டை:

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள அரசு மதுபானக்கடைகளை மூட உத்தரவிட்டது. மூடப்பட்ட கடைகளை மாவட்ட நிர்வாகம் நகரின் எல்லைகளில் திறந்தது.

தேவகோட்டை பஸ் நிலையம் அருகில் செயல்பட்ட மதுபானக்கடை கண்ணங்குடி ஒன்றியம் பூசலாகுடி ஊராட்சி காடத்தி கிராமத்தின் மைய பகுதியில் உள்ள வீட்டில் திறக்கப்பட்டது.

இதை கண்டித்து மகளிர் அமைப்பினர் மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த தெய்வானை கூறுகையில், தற்போது செயல்படும் மதுக்கடையையும், புதிதாக வர உள்ள கடையையும் அகற்றாவிட்டால் தேவ கோட்டை - கண்ணங்குடி சாலையில் மறியல் நடத்துவோம் என்றார்.

Similar News