செய்திகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கருகலைப்பு செய்த பெண் மரணம்
கடலூர் மாவட்டத்தில் கருகலைப்பு செய்த பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
பண்ருட்டியை அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனசெழியன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கலைவாணி மீண்டும் கர்ப்பமானார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். அதன்படி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கலைவாணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் கருகலைப்பு செய்தனர். தொடர்ந்து கலைவாணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கலைவாணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கலைவாணியின் கணவர் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கலைவாணியின் உடலை உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். கலைவாணியின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கலைவாணியின் உறவினர்கள் கூறியதாவது:-
கலைவாணிக்கு கருகலைப்பு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
அதன் பின்னர் கருகலைப்பு செய்ய வியாழக்கிழமை வாருங்கள் என்று கூறியதின் பேரில் நாங்கள் கலைவாணியை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.
தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை கலைவாணிக்கு டாக்டர்கள் கருகலைப்பு சிகிச்சை அளிப்பதாக கூறி அழைத்து சென்றனர். பின்னர் சிகிச்சை முடிந்து கலைவாணியை வெளியே அழைத்து வந்த போது கலைவாணி எந்தவித அசைவுமின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.
கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கலைவாணியை மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு டாக்டர்களிடம் கேட்டோம். அதற்கு டாக்டர்கள் நாங்களே உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கலைவாணி சுவாசிக்க சிரமப்படுவதாகவும், அவருக்கு சுவாசிக்க செயற்கை சுவாசம் அளிக்கப்போவதாகவும் டாக்டர்கள் கூறினர்.
ஆனால், சிறிது நேரத்தில் கலைவாணி இறந்து விட்டதாக எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். கலைவாணிக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். டாக்டர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன கலைவாணியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் கலைவாணியின் உடலை வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டியை அடுத்த ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் தனசெழியன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி (வயது 27). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கலைவாணி மீண்டும் கர்ப்பமானார். இதனால் கணவன்-மனைவி இருவரும் அந்த கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தனர். அதன்படி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கலைவாணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் கருகலைப்பு செய்தனர். தொடர்ந்து கலைவாணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கலைவாணி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த கலைவாணியின் கணவர் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.
ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கலைவாணியின் உடலை உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் உடலை வாங்க மறுத்தனர். கலைவாணியின் சாவில் சந்தேகம் உள்ளது என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது பற்றிய தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கலைவாணியின் உறவினர்கள் கூறியதாவது:-
கலைவாணிக்கு கருகலைப்பு செய்வதற்காக கடந்த திங்கட்கிழமை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தோம். அங்கு அவருக்கு பல்வேறு சோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டனர்.
அதன் பின்னர் கருகலைப்பு செய்ய வியாழக்கிழமை வாருங்கள் என்று கூறியதின் பேரில் நாங்கள் கலைவாணியை ஆஸ்பத்திரியில் சேர்த்தோம்.
தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை கலைவாணிக்கு டாக்டர்கள் கருகலைப்பு சிகிச்சை அளிப்பதாக கூறி அழைத்து சென்றனர். பின்னர் சிகிச்சை முடிந்து கலைவாணியை வெளியே அழைத்து வந்த போது கலைவாணி எந்தவித அசைவுமின்றி மயங்கிய நிலையில் இருந்தார்.
கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நாங்கள் கலைவாணியை மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்குமாறு டாக்டர்களிடம் கேட்டோம். அதற்கு டாக்டர்கள் நாங்களே உரிய சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கலைவாணி சுவாசிக்க சிரமப்படுவதாகவும், அவருக்கு சுவாசிக்க செயற்கை சுவாசம் அளிக்கப்போவதாகவும் டாக்டர்கள் கூறினர்.
ஆனால், சிறிது நேரத்தில் கலைவாணி இறந்து விட்டதாக எங்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். கலைவாணிக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும். டாக்டர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போன கலைவாணியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் கலைவாணியின் உடலை வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.