செய்திகள்

ஈரோடு அரசு போக்குவரத்து பணிமனையில் தற்காலிக டிரைவர்- கண்டக்டர் தேர்வு

Published On 2017-05-16 18:03 IST   |   Update On 2017-05-16 18:03:00 IST
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் பதிலாக தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.
ஈரோடு:

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தையொட்டி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் மற்றும் ஆம்னி பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கும் பதிலாக தற்காலிக டிரைவர்-கண்டக்டர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள். ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இவர்கள் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

வேலைக்கு வரும் டிரைவரிடம் பஸ்சை ஓட்டச் சொல்கிறார்கள். அவர்கள் சரியாக ஓட்டினால் எடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நேர ஷிப்டுக்கு ரூ. 550 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல தற்காலிக கண்டக்டர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது.                                                                 

Similar News