செய்திகள்

மயிலாடுதுறை அருகே கார் திருடர்கள் 2 பேர் கைது

Published On 2017-05-14 13:36 GMT   |   Update On 2017-05-14 13:36 GMT
மயிலாடுதுறை அருகே இரவு வீட்டு முன்பு நிறுத்திருந்த காரை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள பெரம்பூர் ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 61), விவசாயி. இவர், கடந்த 11-ந் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டு வாசல் முன்பு அவரது காரை நிறுத்திவிட்டு தூங்க சென்றார்.
அவர் காலை எழுந்து பார்த்தபோது, வீட்டு வாசல் முன்பு நிறுத்தி இருந்த கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ராஜசேகரன் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கு தொடர்பாக போலீசார், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் இருவரும், ராஜசேகரனுக்கு சொந்தமான காரை திருடி சென்றது தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடிய ஆண்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (25), கோவிந்தசாமி மகன் சந்திரபோஸ் (35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News