ஸ்மார்ட் கார்ட்டில் தெளிவில்லாத படத்தை மாற்றி கொள்ளலாம்
கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களில் அனைத்து விவரங்களும் சரியாக இருந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடப்பட்டு கடந்த மாதம் 1–ந்தேதி முதல் நியாய விலை கடைகள் மூலமாக சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் ஸ்மார்ட் கார்டு வரப்பெற்றுள்ளவர்கள் விவரம் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை ஏராளமானோருக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை. ஸ்மார்ட் கார்டு கிடைக்க பெறாதவர்களின் படம் தெளிவாக இல்லாதததே காரணம். மேலும் புதிய ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கு குடும்ப தலைவர்களின் படம் இல்லாதவர்கள் மற்றும் தெளிவான படம் இல்லாத குடும்ப அட்டைதாரர்களின் பட்டியல் அனைத்து நியாயவிலை கடைகளிலும் ஒட்டப்பட்டுள்ளது.
எனவே அவர்கள் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் சென்று ஸ்மார்ட் போனில் TNEPDS என்ற மொபைல் அப் முலம் படத்தை பதிவேற்றம் செய்து மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.
விவரங்கள்இதுதவிர, சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் பெயர், உறவுமுறை, முகவரி மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றில் பிழைகள் இருப்பின் அவற்றை நியாய விலை கடையில் பராமரிக்கும் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளவும். இதன் அனைத்து விவரங்களையும் www.tnpds.com என்ற பொது வினியோகத் திட்ட இணையதளத்திலும், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் செயல்படும் அரசு பொது இ–சேவை மையங்களிலும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான விவரங்களை வருகிற 10–ந்தேதிக்குள் நேரில் சென்று சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.