செய்திகள்

காரைக்குடி-திருப்பத்தூரில் கல்லூரி மாணவிகள் கடத்தல்?

Published On 2017-04-29 20:15 IST   |   Update On 2017-04-29 20:15:00 IST
கல்லூரி மாணவிகள் 2 பேர் திடீரென மாயமானார்கள். அவர்கள் கடத்தப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிவகங்கை:

காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் சாந்தன்யா (வயது21). கல்லூரி மாணவியான இவர் நேற்று கல்லூரி சென்றார். மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை.

அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை செல்வம் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிவு செய்து மாயமான சாந்தன்யாவை தேடி வருகிறார்.

திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சியை சேர்ந்தவர் சரவணபாண்டி. இவரது மகள் சொர்ணலட்சுமி (23), அரசு கல்லூரியில் படிக்கும் இவர், நேற்று கல்லூரி சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் பூலாங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாணவிகள் இருவரையும் யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News