செய்திகள்
மக்களை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை பாதிக்கும் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:
அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று காலை டெல்லி சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந்த ஒரு திட்டத்தையும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளமாட்டார். அவர் வழியில் தற்போது நடக்கும் ஆட்சியில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர மாட்டோம்.
ஹைட்ரோ ஹார்பன் திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்போம். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் மக்களுக்கு துணை நிற்போம்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திகும் போது தமிழகத்துக்கு தேவையான நிதி உதவிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.