செய்திகள்

ஜெயங்கொண்டம் கோர்ட்டில் குடிபோதையில் எழுத்தரை மிரட்டிய 2 பேர் கைது

Published On 2017-02-08 14:30 IST   |   Update On 2017-02-08 14:30:00 IST
ஜெயங்கொண்டம் கோர்ட்டில் குடிபோதையில் எழுத்தரை மிரட்டிய 2 பேர் கைது

ஜெயங்கொண்டம்:

பெரம்பலூரைச் சேர்ந்தவர் பெனட் (வயது 45). இவர் ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வருகின்றார். அதே கோர்ட்டில் கீழ மாளிகை கிராமத்தை சேர்ந்த மோகன்(32) என்பவர் கடந்த ஜனவரி 12-ம் தேதி முதல் ஒரு வழக்கு தொடர்பாக தினசரி காலை, மாலை இருவேளையும் கையெழுத்திட்டு வருகின்றார்.

இந்நிலையில் நேற்று காலை கையெழுத்திட வந்த போது தன்னுடன் மத்துமடக்கி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52) என்பவரையும் அழைத்து வந்தார். இருவரும் குடிபோதையில் அலுவலக வளாகத்திற்கு நுழைந்து பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக தலைமை எழுத்தர் பெனட் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து எஸ்.ஐ செல்வம் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றார்.

Similar News