செய்திகள்

அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலி

Published On 2017-02-04 16:43 IST   |   Update On 2017-02-04 16:43:00 IST
அறந்தாங்கி அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆர்.புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தன். மீனவர். இவரது மகள் அசுவதி (வயது 5) மீமீசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அசுவதிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் உடல் மிகவும் மோசமடைந்த அசுவதி பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மீனவ கிராமங்களில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இதற்கு மீன் கழிவுகள், கழிவுநீர் சுத்திகரிப்பு இன்மை போன்ற காரணங்களால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி மர்ம காய்ச்சலை பரவுகின்றன. எனவே அரசு மர்மகாய்ச்சலை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News