செய்திகள்

புதுக்கோட்டையில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2017-01-31 14:45 IST   |   Update On 2017-01-31 14:45:00 IST
புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள தொழு நோய் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் உள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகம் சார்பாக காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் காந்தியடிகள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொழுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். மருத்துவமனையில் பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News