செய்திகள்

புதுக்கோட்டையில் 27-ந்தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Published On 2017-01-24 16:02 IST   |   Update On 2017-01-24 16:02:00 IST
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனைடயலாம். மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News