செய்திகள்

புதுக்கோட்டை இலங்கை அகதிகள் முகாமில் இளம்பெண் வி‌ஷம் குடித்து பலி

Published On 2017-01-23 11:38 GMT   |   Update On 2017-01-23 11:38 GMT
புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள லெணா விலக்கு இலங்கை அகதிகள் முகாம் பெண் வி‌ஷம் குடித்து பலியானார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே லெணா விலக்கில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இம்முகாமில் பிரதீப்குமார் தனது மனைவி மேகலாவுடன்(வயது 27) வசித்து வந்தார்.

கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு திருமணம் நடந்து 5 வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரதீப்குமார் தினமும் குடித்து விட்டு வந்து

வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த மேகலா வி‌ஷம் குடித்தார். ஆபத்தான நிலையில் இருந்த மேகலாவை திருமயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்த பின் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேகலா பரிதாபமாக இறந்து விட்டார். நமணசமுத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News