செய்திகள்

புதுக்கோட்டையில் சுயதொழில் முன்னேற்ற கருத்தரங்கு 24-ந்தேதி நடக்கிறது

Published On 2017-01-21 12:01 GMT   |   Update On 2017-01-21 12:01 GMT
புதுக்கோட்டையில் சுயதொழில் மற்றும் சுயமுன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் 24-ந்தேதி நடக்கிறது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர் பயன் பெறும் வகையில் சுயதொழில் மற்றும் சுயமுன்னேற்றம் தொடர்பான கருத்தரங்கு முன்னாள் படைவீரர் நலத்துறை புதுக்கோட்டை சார்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு நாள் கருத்தரங்கு வருகிற 24-ந்தேதி (செவ்வாய் கிழமை) காலை 9.45 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும், விபரங்களுக்கு மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள அணுகவும்:

உதவி இயக்குநர், மாவட்ட முன்னாள் படைவீரர் நலன், கல்யாணராமபுரம் 1வது வீதி, திருக்கோகர்ணம் -அஞ்சல், புதுக்கோட்டை-622002 தொ.பே.எண்: 04322-221593 கருத்தரங்க அமைப்பாளர்: இத் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

Similar News