செய்திகள்

காஞ்சீபுரம் அருகே பாலத்தில் லாரி மோதல் - டிரைவர் பலி

Published On 2017-01-09 15:50 IST   |   Update On 2017-01-09 15:50:00 IST
காஞ்சீபுரம் அருகே தரைப் பாலத்தில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:

திருவள்ளூரை அடுத்த புட்லூர் சி.எஸ்.ஐ.பள்ளி தெருவில் வசித்தவர் பாபு (41). மினிவேன் டிரைவர். புட்லூர் பக்தவச்சலம் நகரை சேர்ந்த கிளீனர் ஜெபஸ்டின்.

இருவரும் திருவள்ளூரில் இருந்து மினி லாரியில் பர்னிச்சர் சாமான்களை ஏற்றிக் கொண்டு பெங்களூருக்கு சென்றனர். அங்கு பர்னிச்சர் சாமான்களை இறக்கி விட்டு மீண்டும் திருவள்ளூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி அங்கிருந்த தரைப் பாலத்தில் மோதியது.

இதில் டிரைவர் பாபு அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கிளீனர் ஜெபஸ்டின் படுகாயம் அடைந்து காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல், வாலாஜாபாத்தை அடுத்த ஒரகடத்தில் தனியார் கார் தொழிற்சாலை உள்ளது. இங்கு அரியலூர் மாவட்டம் எடைக்காடு கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் தியாகராஜன் (29) இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர் பணியின்போது எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்கும் முயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எந்திரம் திடீரென இயங்கியது. இதில் தியாகராஜனின் தலை நசுங்கியது. உடனடியாக அவரை தாம்பரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே தியாகராஜன் பரிதாபமாக இறந்தார்.

Similar News