செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொலை
ஸ்ரீபெரும்புதூர் அருகே தலையில் கல்லைப்போட்டு வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டூர் கோட்டை காட்டரம்பாக்கம் சாலையில் உள்ள ஏரிக்கரை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது தலை, கல்லை போட்டு நசுக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
அவர் ஜீன்ஸ் பேண்ட்டும், சட்டையும் அணிந்து இருந்தார். வடமாநிலத்தவர் தோற்றத்தில் காணப்பட்டார்.
முன்விரோதத்தில் அவரை யாரேனும் கடத்தி கொன்று வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டூர் கோட்டை காட்டரம்பாக்கம் சாலையில் உள்ள ஏரிக்கரை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது தலை, கல்லை போட்டு நசுக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மணிமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையுண்ட வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
அவர் ஜீன்ஸ் பேண்ட்டும், சட்டையும் அணிந்து இருந்தார். வடமாநிலத்தவர் தோற்றத்தில் காணப்பட்டார்.
முன்விரோதத்தில் அவரை யாரேனும் கடத்தி கொன்று வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடந்து வருகிறது.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.