செய்திகள்

மலேசியாவில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திய 10 பேர் கும்பல் சிக்கியது

Published On 2017-01-06 14:55 IST   |   Update On 2017-01-06 14:55:00 IST
மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்திய 10 பேர் கும்பல் சிக்கியது.
ஆலந்தூர்:

மலேசியாவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது குழுவாக வந்த 10 பேர் தலா 100 கிராம் வீதம் தங்க கட்டி கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த அய்யாசாமி என்பவரது தலைமையில் சுற்றுலா விசாவில் மலேசியாவில் இருந்து வந்தது தெரிந்தது. அதிகாரிகளிடம் சிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு வரும் 100 கிராம் தங்க கட்டிகளாக பிரித்து கடத்தி வந்து உள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த தலா ஒரு ஐபோன் வீதம் மொத்தம் 10 ஐபோனும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், ஐபோனின் மொத்த விலை ரூ.36 லட்சம் ஆகும். இதுதொடர்பாக 10 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 700 கிராம் தங்கம் கடத்தி வந்த சென்னையை சேர்ந்த இஸ்மாயில் சிக்கினார். அவரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும்.

Similar News