செய்திகள்

மத்தூர் அருகே கள்ளகாதல் விவகாரம்: கூலித்தொழிலாளி மனைவி தீக்குளித்து தற்கொலை

Published On 2017-01-05 23:22 IST   |   Update On 2017-01-05 23:22:00 IST
மத்தூர் அருகே கள்ளகாதல் தகராறில் கூலித்தொழிலாளி மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கருங்காலிப்பட்டியைச் சேர்ந்தவர் பச்சியப்பன் கூலித்தொழிலாளி.

இவரது மனைவி மகேஸ்வரி(28). இவர் கடந்த 30-ந் தேதி தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பச்சியப்பன் மத்தூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேஸ்வரி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மகேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மதன் மோகன் என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது.  இதனை தட்டி கேட்டதால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மகேஸ்வரி தனது உடலில் மண்எண்ணை ஊற்றிக் கொண்டு தீவைத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து மதன்மோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பச்சியப்பன்-மகேஸ்வரி தம்பதிக்கு நவீன் (12), நித்திஷ்(8) என்ற 2 மகன்கள் உள்ளது குறிப்பிடதக்கது.

Similar News