செய்திகள்

விராலிமலை அருகே வி‌ஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

Published On 2017-01-01 11:28 IST   |   Update On 2017-01-01 11:28:00 IST
விராலிமலை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை:

விராலிமலை அருகே உள்ள அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 55) கூலித் தொழிலாளி. இவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.

Similar News