செய்திகள்

மயிலாடுதுறையில் 3 வீடுகளில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2016-12-16 22:43 IST   |   Update On 2016-12-16 22:43:00 IST
மயிலாடுதுறையில் 3 வீடுகளில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை திருவிழந்தூர் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் மோகன்தாஸ்(40). இவர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று மதியம் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் தீ அருகில் இருந்த ஜெயசுதா, மூர்த்தி ஆகியோர் வீடுகளுக்கும் பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். அதற்குள் மோகன்தாஸ், ஜெயசுதா, மூர்த்தி ஆகியோர் வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.

ஜெயசுதாவின் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 25 பவுன் நகையும் தீயில் நாசமாகியது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. கியாஸ் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News