செய்திகள்

வேதாரண்யம் அருகே இளம்பெண் தீயில் கருகினார்

Published On 2016-12-15 18:22 IST   |   Update On 2016-12-15 18:22:00 IST
வேதாரண்யம் அருகே சமையல் செய்த போது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் தீயில் கருகினார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள உடைய தேவன்காடு பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி அபிராமி (22). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

சம்பவத்தன்று அபிராமி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது உடலில் தீப்பிடித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வாய்மேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News