செய்திகள்

வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து மூதாட்டி பலி

Published On 2016-12-14 17:51 IST   |   Update On 2016-12-14 17:52:00 IST
வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பூச்சு மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர் தீராத வயிற்று வலியால் அவதி பட்டு வந்தாராம்.

இவர் கடந்த 10-ந் தேதி காலை வயிற்று வலியால் அவதிப்பட்டவர் வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் மயங்கி இருந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளிக்கப்பட்டது. திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 12-ந் தேதி மாலை தனபாக்கியம் இறந்தார்.

புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சிவதாஸ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Similar News