செய்திகள்

சீர்காழியில் 3 ஆயிரம் மாணவர்கள் மவுன அஞ்சலி

Published On 2016-12-14 15:39 IST   |   Update On 2016-12-14 15:39:00 IST
சீர்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 3ஆயிரம் மாணவ மாணவிகள் மவுன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

சீர்காழி:

சீர்காழியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுமார் 3ஆயிரம் மாணவ மாணவிகள் மவுன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி, மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், முதல்வர்கள் உள்பட சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர். பின்னர் பாரதி எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி முதல்வர் ஜோஷ்வா பிரபாகரசிங், கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், ராஜமாணிக்கம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், சந்திரசேகர், மாவட்ட பேரவை செயலாளர் நற்குணன், முன்னிலையில் மவுன ஊர்வலமாக புறப்பட்டனர்.

பிடாரி வடக்கு வீதி, பிடாரி மேலவீதி, மருத்துவமனை சாலை, கச்சேரி ரோடு, வழியாக தமிழிசை மூவர் மணிமண்டபம் சென்று ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். இதில் பள்ளி துணை முதல்வர் சரோஜா, கல்லூரி துணை முதல்வர் ஜெயந்திகிருஷ்ணா, மேலாளர் சுதாகர், வைத்தீஸ்வரன்கோவில் பேரூர்செயலாளர் போகர்ரவி, ஒன்றிய மாணவர் அணி துணை செயலாளர் ரமேஷ்பாபு, நகர பேரவை செயலாளர் மணி, தொகுதி இணை செயலாளர் பாரிவள்ளல், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கலியமூர்த்தி, மாவட்ட தொழில்நுட்பபிரிவு துணை செயலாளர் பரணிதரன், மாவட்ட பிரதிநிதிகள் ராமையன், கார்த்தி, ஆசிரியர் கோவிநடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டி.எஸ்.பி. சேகர் தலைமையில் இன்ஸ்பெக்டர் அழகுதுரை, மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Similar News