செய்திகள்
வேதாரண்யம் அருகே பள்ளியில் கணினி பொருட்கள் திருட்டு
வேதாரண்யம் அருகே பள்ளியில் கணினி பொருட்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமையாசிரியராக நடராஜன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த 10-ந் தேதி மாலை பள்ளியில் உள்ள கணினி அறை மற்றும் பள்ளியை பூட்டி விட்டு சென்றுள்ளார். பிறகு 12-ம் தேதி காலை பள்ளியை திறந்து பார்த்தபோது ஒருஅறையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலுள்ள கணினி கருவிகள் சிபியூ-2, மவுஸ்-2, ஸ்பீக்கர்-4 ஆகிய ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கணினி பொருட்கள் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து தலைமையாசிரியர் நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.